பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்-நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த கோட்டை காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரிக்கையில், இறந்த முதியவர் உற்றார் உறவினர் இன்றி யாசகம் கேட்டு உண்டு, சுற்றியுள்ள கடை முன்பு உறங்கியும் ஜீவனம் நடத்தியுள்ளார்.

இறந்த நபர் சுமார் ஐந்து அடி உயரமும், மாநிறமும், பச்சை கலர் வேஷ்டி, மெரூன் கலர் சட்டையும் அணிந்திருந்தார். தலை முடி தாடி வெள்ளை நிறமாக இருந்தது.மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா நல்லடக்கம் செய்வதற்காக உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார் தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத ஆதரவற்றவர் உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *