திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினரும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் புலவர் சிவ.செல்லையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.