நாமக்கல் மாவட்ட கூடை பந்து கழகம் மற்றும் பி ஆர் டி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் 23ம் ஆண்டு மாநில அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கூடைப்பந்து போட்டிகள்
நாளை 01.02.2023 அன்று புதன்கிழமை நாமக்கல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி வரும் 05 02 2003 முடிய 5 நாட்கள் நடைபெற உள்ளது
இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் கூடைப்பந்து கழக நிர்வாகிகள் பேட்டி அளித்த போது மேலும் தெரிவித்ததாவது :-
இந்த மாநில அளவு கூடைப்பந்து போட்டிக்கான துவக்க விழா நாளை 01.02.2023 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது
இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு பி ஆர் டி குரூப் தலைவர் டி பி தங்கராஜ் தலைமை தாங்குகிறார் அவருடன் மாநில கூடைப்பந்து கழகத்தின் செயலாளர் அஜித் அகமதும் தலைமை வைக்கிறார்
போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் அவருடன் போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. கலைச்செல்வன் உடன் துவக்கி வைக்கிறார்
மேலும் முதன்மை கல்வி அலுவலர் பா. மகேஸ்வரி மாவட்ட கல்வி அலுவலர் நாமக்கல் நகராட்சி ஆணையாளர் கே எம் சுதா, நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர் பெரியண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஐ. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைக்கிறார்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக கே. கே. பி .நிறுவனம் நல்லதம்பி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம் கருணாநிதி, எம் நடராஜன், கே எஸ் ஆர் சீனிவாசன், பி கணேசன், கோல்டன் கார்ஸ் பி ரவி, கே கே சண்முகம், கே பி பாண்டியராஜன், எஸ் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்
இந்த போட்டியில் மிகவும் பிரபலமான 40க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள்