திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார். கடந்த 2020 ஆம் ஆண்டு திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை திட்ட அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் மழைநீர் சேமிப்பு, மரம் வளர்த்தல் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை திண்டுக்கல்லில் செயல்படுத்தினார். இந்நிலையில் பொதுமக்களின் பாராட்டையும் கலெக்டரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.