திருவாரூரில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 218 அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் 33 பயனாளிகளுக்கு 16,77,838 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கருட் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.