திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலை குண்டூர் அய்யம்பட்டி பிரிவு சாலை அருகே விலாசம் தெரியாத திருநங்கை அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு இருந்துள்ளார். அவரது உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கையில், இறந்த நபர் நெற்றி மற்றும் கை காலில் காயம் இருந்ததாகவும் பெயர் ராஜாமணி என்பது தெரியவந்துள்ளது. உள் நோயாளியாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இறந்த நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு திருச்சி நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருப்பதி தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருப்பதி காவலர் துரை செபாஸ்டின் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து யோகாசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.