திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே கலைஞா் நகரைச் சோ்ந்த குணசேகரன் (59) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ‘பெல்’ நகரில் திரும்பும்போது எதிர்வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ‘பெல்’ போலீஸாா் சடலங்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா் ஓட்டுநரான ஒசூரைச் சோ்ந்த ஆா். காத்தமுத்து (41) என்பவரைக்
கைது செய்தனா்.
மண்னை
க.மாரிமுத்து.