காரைக்காலில் காங்கிரஸ் சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நடைபயணத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் புரோக்கர்கள் மூலம் ஊழல் நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பணியில் உள்ள பலர் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா வளர்ச்சியடையும் என அரசு கூறியது. ஆனால் மாநிலத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரங்கசாமி கட்சி மக்களுக்கு விபூதி கொடுத்து ஏமாற்றும் கட்சியாக உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. காரைக்காலிலும் எந்த வளர்ச்சியும் இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மவுன ஆட்சி நடக்கிறது. புதுவை மக்களை வஞ்சிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.