கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வானுயர எழுந்த வெண் புகையால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து சென்ற தேர்வாய் கண்டிகை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரை கலவையையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சோடியம் ரசாயன சேமிப்பு கிடங்கில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வானுயர எழுந்த வெண் புகையால் சுற்றுப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

செய்தியாளர் சீனிவாசன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *