கோவை சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மைய பெண்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு 7500 பிறந்த நாள் வாழ்த்து மடல்
பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் இருந்து 7500 வாழ்த்து மடல் அனுப்பி பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்..
சமூகத்தில் பெண்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையிலும்,தொழில் முனைவொர்களாக பெண்களை மாற்றும் வகையில் கோவையில் சமூக திறன் மேம்பாட்டு மையம் அதன் தலைவர் டாக்டர் ஜி.முகம்மது ரபீக் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது..
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு,தமிழக மக்களுக்கு பல விதமான நலத்திட்டங்களில், 118 நலத்திட்டங்கள் மக்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த பயனாளிகள் தமிழக முதல்வருக்கு மார்ச் 1 பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் நன்றி செலுத்தும் வகையில் கடிதம் எழுதி உள்ளனர் இந்த கடிதம் முதலமைச்சருக்கு 1ம் தேதி கிடைக்கும் வகையில் அனைவரும் இணைந்து வாழ்த்து மடலை அனுப்பி உள்ளனர்..
சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பாக அரசாங்கம் வழங்கக்கூடிய நான் முதல்வன் திட்டம் மூலம் 1000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சிகள் அளித்தும் அவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கி பிளாஸ்டிக் போன்ற மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடு விளைக்கக்கூடிய பொருட்களுக்கு மாற்றாக எளிதில் மக்கும் பொருட்களை உற்பத்தி செய்ய பல பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு உலக மகளிர் தின நிகழ்ச்சி முழு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும்,.இதன் ஒரு பகுதியாக முதல்வருக்கு நன்றி செலுத்தும் வகையில் 7500 பெண்கள் ஒன்றிணைந்து 7500 கடித வாழ்த்து அனுப்பி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நன்றி கடிதம் அனுப்பி உள்ளதாக சமூக மேம்பாட்டு திறன் பயிற்சி மையத்தின் தலைவர் முகம்மது ரபீக் தெரிவித்தார்..