சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த 2011ஆண்டு காவல்துறையினரால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்த கோரி இன்று கருப்பு தினமாக அனுசரித்து புதுச்சேரி வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

சென்னை உயர்தீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி காவல்துறையினரால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆண்டுதோறும் பிப்ரவரி 19-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டும் நாளை விடுமுறை என்பதால் இன்று கருப்பு தினமாக அனுசரித்து புதுச்சேரியில் 13 நீதமன்றங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தமிழக அரசு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *