புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற ஆடவர்,பெண்களுக்கான ஜூனியர் வாலிபால் போட்டி நடைப்பெற்றது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வகணபதிஎம்.பி சட்டமன்ற உறுப்பினர் அனிபால்கென்னடியும் இணைந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்
புதுச்சேரி வாலிபால் சங்கத்தின் சார்பாக நடைப்பெற்ற வாலிபால் போட்டியில் 29 ஆண்கள் அணியும் ,12 பெண்கள் அணியும் கலந்துகொண்டு உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் விளையாடின.
போட்டியில் ஆண்கள் பிரிவில் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஜாலிபிரதர்ஸ் கிளப் அணி முதலிடத்தில் வெற்றிப்பெற்றது. இரண்டாவது இடத்தை கூனிச்சம்பேட் ஜூப்பிட்டர் அணிவெற்றிப்பெற்றது.பெண்கள் பிரிவில் கரடிக்குப்பத்தைச் சேர்ந்த ஸ்பைடர் ஸ்போஷ் கிளப் அணிமுதலிடத்திலும்,முத்தியால்பேட்டையை சேர்ந்த சூதுமத் கிளப் அணி இரண்டாவது இடத்திலும் வெற்றிபெற்றார்கள் .இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவு விளையாட்டு வீரர்களுக்கு செல்வகணபதி எம்.பி அவர்கள் முதலாவது மற்றும் இரண்டாவது பரிசுகளை வழங்கினார்.பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முதலாவது இரண்டாவது பரிசுகளை வழங்கினார்.
பாண்டிச்சேரி ஒலிம்பிக் அசோசியேஸ் சார்பாக தனசேகர் அவர்களும் மற்றும் புதுச்சேரி வாலிபால் சங்கத்தின் உறுப்பினர்கள் முருகையன் ஜாய்ன்ட்செக்ரெட்ரி சி.சுந்தர்ராசு ஒய்ஸ் பிரசிடென் சுகுமாரன் பாண்டிச்சேரி வாலிபால் சங்கத்தினர் சுகுமாரன் வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டு இப்போட்டியை சிறப்பித்தார்கள் .
புதுச்சேரி வாலிபால் சங்கத்தின் செயலாளர் ராமதாஸ் ஏற்பாட்டில் இப்போட்டி நடைப்பெற்றது இதில் கழக தோழர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.