புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் வில்லியனூர் சிவன் கோயில் அருகில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் ஜானகிராமன் வரவேற்புரை வழங்கினார். வட்டாட்சியர் அய்யனார், செயலர் கதிரேசன் முன்னிலை வகித்தனர். மண்டல அமைப்பாளர்கள் இரவி, இரமேஷ், இரவீந்திரன், நோக்கவுரை வழங்கினர். மண்டல அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன், நந்தகோபால், மண்ணாங்கட்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வாழ்த்திப்பேசினார். மண்டல அமைப்பாளர் அபினேஷ் நன்றி கூறினார்.