தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா…
தாராபுரம், ஏப்ரல் 25-
திருப்பூர் மாவட்ட தாராபுரம் தெக்காலூர் பகுதியில் பிரபலமான மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விளக்கு ஏற்றி வைத்து ஒளி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி செயலாளர் சுலைமான் கூறுகையில், மாணவியர் மாணவியர் தங்கள் பயின்ற கல்வியை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தி நல்ல வேலை வாய்ப்பை பெற்று தான் படித்த கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தலைமை உரையாற்றினார்.. கல்லூரி துணைத் தலைவர் தமிழரசன் பொருளாளர் சுப்பிரமணியன் இயக்குனர் அப்துல் ரகுமான் வாழ்கிறார்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.. மேலும் இளநிலை முதல்நிலை பட்டப்படிப்பு பயின்ற மாணவிகள் விளக்கு ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்த விழாவில் கல்லூரியில் பயின்ற மாலதி பிரியா என்ற மாணவியின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்த குழு காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு தொகை பெற்ற மாணவியின் தாயாரிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்னர் இந்த நிகழ்ச்சியின் கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்ச்செல்வி நன்றியுரை கூறினார்..
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20