தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஒருவர் படுகாயம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வாரச்சந்தைக்கு கோழி விற்பனைக்காக வந்த விவசாயி விபத்தில் காயமடைந்தார்.
ஓலாப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (40), கிருஷ்ணசாமியின் மகன், இரவு எட்டு மணி அளவில் குண்டடம் வாரச்சந்தைக்கு வந்திருந்தார். அப்போது கோவை உக்கடத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி இரும்பு பைப்புகள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது குண்டடம் பகுதியில் லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் லாரியின் முன் பகுதியில் இருசக்கர வாகனம் சிக்கியது அதில் பலத்த காயமடைந்தனர்.
பிறகு இருசக்கர வாகனம் மற்றும் லாரி குண்டடம் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் மேலும் இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் முருகனும், இருசக்கர வாகன ஓட்டுநர் ஈஸ்வரனும் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு ஈஸ்வரனை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மற்றும் லாரி ஓட்டுநர் முருகன் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குண்டடம் காவல்துறையினர் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.