புதுவையில் அக்னி எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. வரும் 29-ஆம் தேதி வரை கத்தரி நீடிக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புயல் காரணமாக அக்னி தொடங்கிய முதல் நாளில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. வங்கக் கடலில் நிலை கொண்ட மொக்கா புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக புதுவையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. அனல் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கல் வெறிச்சோடி கணப்பட்டது, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவிலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த 13-ஆம் தேதி 100.22 டிகிரி பதிவாகி இருந்த நிலையில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்தது. நேற்றும் வெயில் அதிகரித்து 101.84 டிகிரி அள வுக்கு பதிவாகி இருந்தது. 15-ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *