பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நல்லொழுக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் முத்துக்குமார் வரவேற்புரை வழங்கினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கலந்துகொண்டு மாணவிகள் எவ்வாறு ஒழுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்று கருத்துரை வழங்கினார். தலைமைக் காவலர் அம்பேத்கர் குமரப் பருவத்தில் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்து விளக்கவுரை வழங்கினார்.

சுமார் ஐநூறு மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *