வி ..தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி
புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். தமிழ் விரிவுரையாளர் சிவகாமி வரவேற்புரை வழங்கினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை பணி நிறைவு பெற்ற புதுமை பாலக்கிருஷ்ணன் கலந்துகொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து கருத்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
பல்வேறு போக்குவரத்து வினா விடை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.