புதுவை மாநிலம் ஏம்பலம் மறை மலை அடிகள் அரசு உயர் நிலைப் பள்ளியில் சமுதாய நலப் பணி திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப் பட்டது. பள்ளி முதல்வர் லதா மாணவர்கள் சாலை விதிகள் கடைபிடிக்கா விட்டால் விபத்துகள் ஏற்படும் என்று தலைமை உரையில் கூறினார்.

பொறுப்பு துணை முதல்வர் தீப்பாய்ந்தான் நோக்க உரையாற்றினார். போக்குவரத்து துறை சார்பில் சிறப்புரை வழங்கிய புதுமை பாலகிருஷ்ணன் மாணவர்கள் பேருந்து
படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் அங்க இழப்புகள் , உயிர் இழப்புகள் பற்றி விளக்கமாக கூறினார்.

கோட்டில் நடக்க மாணவர்களுக்கு பயிற்சி தரப் பட்டது. தலைமை ஆசிரியை கீதா , பேராசிரியை பச்சை அம்மாள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

சமுதாய நலப் பணி திட்ட அலுவலர் பத்மாவதி சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். மாணவர்களும், பேராசிரியர்களும் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *