வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை அடைந்துள்ளது. அதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று காலை முதல் வானம் கடும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதுபோல் காரைக்கால் தனியார் துறைமுகத்திலும் நேற்று 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.