மணவெளி தொகுதி தாளக்குப்பம் பகுதி அண்ணா நகரில் எஸ் ஓ எஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி அரசின் பங்களிப்புடன் சிறுவர்களுக்கான திறந்த நிலை இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இந்த இல்லத்தினை திறந்து வைத்தார். இந்த இல்லத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட, பெற்றோர்களை இழந்த, வீட்டை விட்டு வெளியேறி நிற்கதியாய் நிற்கும் சிறுவர்களை தற்காலிகமாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உடை மருத்துவம் மற்றும் பிற உதவிகள் இந்த இல்லத்தில் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *