புதுச்சேரி வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு கடந்த, 47 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி வீட்டுவசதி வாரியம் அண்ணாநகரில் உள்ளது. இங்கு பணிபுரியும் 45 பேருக்கு ஊதியம் 47 மாதங்களாக தரப்படவில்லை. இதையடுத்து இன்று பணியை புறக்கணித்து வாரிய நிர்வாகத்தை கண்டித்து வீட்டுவசதி வாரிய ஊழியர் சங்கத்தின் அனைத்து ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “ஊழியர்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. எவ்வித வருவாயும் இல்லை. புதிய திட்டங்களையும் கடந்த அரசும், புதிதாக பொறுப்பேற்ற அரசும் செய்யவில்லை. 47 மாதங்களாக ஊதியம் தரவில்லை. ஓய்வூதியக்கொடையும் பணிஓய்வு பெற்றோருக்கு தரவில்லை. பணியில் இருப்போர் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற 45 பேரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.