வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள் அருள்முருகன் நளினி கணேஷ் மாநில செயலாளர் அகிலன் சகுந்தலா
பாஜக மாநில பட்டியலணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் காரைக்கால் மாவட்ட செயலாளர் செந்தில் அதிபன் சிறுபான்மையினர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விக்டர் ராயப்பசாமி ஓ பி சி மாநிலத் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து
பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் உடன் உள்துறை அமைச்சர் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் துணைத் தலைவர்கள் அருள் முருகன் மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் திரு குருசங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர் தொடர்ந்து
செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் சாமிநாதன் அவர்கள் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பிஜேபி தலைமையிலான ஆட்சியை பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து நாராயணசாமி பேசி வருகிறார் என்றும் ஊழலை பற்றி பேச முதலமைச்சர் நாராயணசாமிக்கு தகுதி இல்லை என தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்காரர்களே நாராயணசாமியை புறக்கணித்து வருகின்றன, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வலிமையை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். விரைவில்
தொழிலதிபர் அதானிகும்,பிரதமர் நரேந்திர மோடிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தைரியம் இருந்தால் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பயத்தின் அடிப்படையில் நாராயணசாமி உளறி வருவதால், புதுச்சேரியில் விரைவில் காங்கிரஸ் கூடாரம் காலி ஆகி அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு திருப்பி வர வாய்ப்பே இல்லை எனவும் மாநில தலைவர் தெரிவித்தார்.