புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாமில் சாலை விபத்துக்கள் பற்றி கருத்தரங்கு நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளர் புதுமை பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சாலை விபத்துக்கள் , உயிரிழப்புகள் , பொருள் இழப்புகள் குறித்து விரிவாக பேசினார் . மாணவர்கள் சுதாகர் , கோகுல் , விரிவுரையாளர் ராமமூர்த்தி மற்றும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ரோஸ் மேரி கிறிஸ்டினா ஆகியோரிடம் பரிசு பெற்றனர் . விரிவுரையாளர் மற்றும் நாட்டு நல பணி திட்ட அலுவலர் துர்கா தேவி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ரோஸ்மேரி கிறிஸ்டினா மற்றும் துர்கா தேவி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *