ஆதாயம் தேடவே மருத்துவர் ராமதாஸ் தமிழை தேடி விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டுள்ளதாக அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் சி. என். ராமமூர்த்தி தலைமை தாங்க கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதில் புதுச்சேரி மாநிலத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கட்சியின் கொடியையும் நிறுவனர் சி. என். ராமமூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரிக்கு நெடுங்காலமாக மாநில அந்தஸ்து கேட்டு அரசியல் கட்சிகள் போராடி வருகிறது எங்களது கோரிக்கையும் புதுவைக்கு உடனடியாக மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதுதான் என்றார்.
மேலும் தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் இனிவரும் தேர்தல்களில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி போட்டியிடும் என்று தெரிவித்த அவர் அதற்குள் புதுச்சேரியில் கட்சியை பலப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
தமிழைத் தேடி என்ற பெயரில் மருத்துவ ராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டுள்ளார் இது ஒரு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இந்த குற்றம் சாட்டிய அவர் ராமதாஸ் என்பவர் செல்லா காசாகி விட்டார் இனி அவரது கதை எடுபடாது என்றும் சூட்கேஸ் கேட்ட இடத்தில் ஸ்வீட் பாக்ஸ் ஆவது கிடைக்கட்டுமே என்ற நோக்கத்தில் அவர் செயல்படுவதாக பகிரங்கமாக சி. என். ராமமூர்த்தி குற்றம் சாட்டினார்