புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக கொண்டாட முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்- அமைச்சருக்கு புதுவை மாநில கழகத்தின் சார்பிலும், மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை யும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். சார்பிலும், அ.தி.மு.க.வின் தொண்டர்களின் சார்பிலும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *