தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், தற்போது தென்காசி மாவட்டம், புளியரை வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிஎஸ்பி பால் சுதாகர் தலைமையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்
இதில் புளியரை போக்குவரத்து வாகன சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூபாய் 1.95,150/- ரொக்க பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை