தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணை பொதுச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
சட்டமன்றம் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக இருக்க வேண்டும் தனிமனிதர்களை தலைவர்களை இழிவுபடுத்தக்கூடிய இடமாக தனிப்பட்ட காழ் புணர்ச்சிகளை பற்றி பேசக்கூடிய ஒரு இடமாக அது மாறிவிடக்கூடாது
அது எல்லாருக்குமே மரியாதை கொடுக்கக்கூடிய இடமாக வெற்றி தோல்விகள் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று அதையெல்லாம் உயர்ந்த பொறுப்பிலே இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் பேசக்கூடியது என்பது சரியான இடமாக இருக்காது என்பதை உணர்ந்த இடமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் அந்த எதிர்பார்ப்பு அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தார
வது நிறைவேற வேண்டும் என்பது எதிர் பார்ப்பாக உள்ளது
எப்பொழுதுமே ஒன்றிய அரசோடு மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை தான் எடுக்கிறார்கள் மக்கள், கூட்டணியில் இருப்பவர்கள் அதை விரைவில் புரிந்து கொள்வார்கள்
முதலமைச்சருடைய நேரடி பார்வையில் இருக்கக்கூடிய ஒரு துறை காவல் துறை இப்படி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன முதலமைச்சரிடம் இது பற்றி கேள்விகள் எழுப்பப்படும் போது அவர் கடந்த ஆட்சி என்ற ஒரு காரணத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்போது நடந்து கொண்டிருக்கிற வன்முறைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு யார் மீது இந்த குற்றங்கள் பழிகளை சுமத்தலாம் என்று சொல்லிவிட்டு இதிலிருந்து வெளியே வருவதற்கு பொறுப்பில் இருந்து வெளியே வருவதற்கு காரணங்களை தேடக்கூடாது
சாதாரணமாக மிகப்பெரிய அளவிலே மக்கள் மனதிலே பயத்தை உருவாக்கக்கூடிய குழந்தைகளுக்கு எதிராக பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் மனதில் பயத்தை விதைக்கக்கூடிய அளவிற்கு அதிகமாக மோசமாக இருக்கக்கூடிய சூழலில் இதற்கு முடிவு காண்பதற்கு தான் ஒரு அரசாங்கம் ஒரு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.