புதுச்சேரி.மே.13-தவளகுப்பம் சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் 2ஆம் ஆண்டு அஷ்டமிபெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தவளகுப்பம் அண்ணாநகர் பகுதியில் தனிக்கோயிலாக அமைந்துள்ள சொர்ணாகர்ஷணபைரவர் மற்றும் அஷ்டபைரவர்கள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 2 ஆம் ஆண்டு அஷ்டமிவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 ஆம் தேதி காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து வில்லியனூர் கோமதி அம்மையாரின் குழுவினரால் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. 10ஆம் தேதி மகாதீபாரதனையும் தொடர்ந்து பைரவர்க்கு இலட்ச்சார்ச்சனையும் மாலையில் பக்தி இசை நிகழ்ச்சியும் நடந்தது. 11ஆம் தேதி காலையில் ஊரணி பொங்கல் வைத்தலும் மாலையில் திருவிளக்கு வழிபாடும் நடந்தது.
இதில் முக்கிய விழாவாக நேற்று காலையில் சங்காபிஷேகமம் மகாதீபாரதனையும் மாலையில் புதுவை சிவகுமாரசாமி தேசிகபரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணமும் விருந்து உபசரிப்பும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு சொர்ணாகர்ஷண பைரவர் திருத்தேர் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் பாஸ்கரன், விழாக்குழு தலைவர் ராயல், வெங்கடேசன் ,மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.