புதுச்சேரி வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து புதுச்சேரி மக்களை காக்கும் வகையில், தொகுதிதோறும் நீர்மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க மாநில திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 20 தொகுதிகளில் அத்தொகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினந்தோறும் பொதுமக்களுக்கு குளிர்ச்சியான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், சோமசுந்தரம், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹைனீன், துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ரமணன், சபரிநாதன், ராஜேந்திரன், செல்வநாதன், அங்காளன், கிளைச் செயலாளர்கள் அருள்மணி, மிலிட்டரி முருகன், சுரேஷ், அன்புநிதி, வீரக்கண்ணு, திலகர், சுப்ரமணியன், கதிரவன், வெங்கடேசன், அக்பர், கமால்பாஷா, ரகுராமன், தஷ்ணா, ராமதாஸ், ரமேஷ், தேசிங்கு, ரபீக், பாஸ்கர், சிலம்பு, மணவாளன், செல்வநாயகம், லட்சுமணன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.