புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 110 வார்டுகளில் இந்த பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர் ஓய்வு பெற்ற புதுச்சேரி மாவட்ட நீதிபதி ராமபத்ரன், கலந்துகொண்டு அங்கன்வாடி ஊழிய ர்களிடம் கருத்துகளை கேட்டும், ஆலோசனை களையும் வழங்கினார்.
அதில் கொம்யூன் பஞ்சாயத்து மேனேஜர் வீரம்மாள், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அரியாங்குப்பம் திட்ட அதிகாரி செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செழியன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *