புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி அரசு தலைமை பொறியாளர் பா.பழனியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.உடன் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, செயலர் சீனு.மோகன்தாசு,,பொருளர் மு.அருள் செல்வம்,துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு,துணைச் செயலர் தெ.தினகரன்,பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்மாமணி அ.உசேன், கவிஞர் ஆனந்தராசன்,பேராசிரியர் வெல்.கார்த்திகேயன் மற்றும் பலர் உள்ளனர்.