பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள்
அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்
திமுக–வினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை !
தந்தை பெரியார் போற்றிய அறிவுலக மேதை – காஞ்சித் தந்த காவியத் தலைவர் – தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் அயராது பாதுபட்ட உத்தமர் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் – சுயமரியாதை சுடரொளி – தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் – நமது இயக்கத்தை தோற்றுவித்து, மறைந்த நமது கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வழிநடத்திய ஆசானாகி, கோடானுகோடி தமிழர்களின் அண்ணனாக விளங்கி, தமிழகத்தில் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்று தளபதி அவர்கள் முதல்வராகத் திகழ வாழ்த்தி வழிகாட்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 55–வது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் ஏ.எப்.டி., திடலில் ஒன்று கூடி மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலமாக சென்று ஒதியஞ்சாலையில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார்கள்.
தொடர்ந்து, வில்லியனூர் மாடவீதியில் அத்தொகுதி திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல், மொழிப்போர் தியாகி அ. சோமசுந்தரம் தலைமையில் அரும்பார்த்தபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.