காரியாபட்டி கல்குவாரி கிடங்கில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினரை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் கீழஉப்பிலிக்குண்டு அருகே ஆவியூரை சேர்ந்த சேதுவுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. குவாரியின் ஒரு பகுதியில் சங்கரன்கோவில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 மினி வேனில் 3 தொழிலாளா்கள் வெடி மருந்து பொருட்களை ஏற்றினா்.
அப்போது எதிர்பாரதவிதமாக வெடி பொருட்கள் உராய்வ எற்பட்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கந்தசாமி(வயது 47) தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் ஒன்றியம் செந்தட்டியாபுரம் புதுார் கிராமத்தை சேர்ந்த குருசாமி வயது (வயது 60) வடமலாபுரத்தைச் சேர்ந்த பெரியதுரை வயது (வயது 25), ஆகியோரின் உடல்கள் ஒரு கி.மீ. துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனா்.
இது குறித்த தகவல் அறிந்த தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா முன்னாள் அமைச்சரும் கழக மகளிரணி துணைச்செயலாளா் வீஎம்.ராஜலெட்சுமி, மாவட்டக்கழக அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்டக்கழக துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்டப்பொருளாளா் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளா் பரமகுருநாதன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டலச்செயலாளா் கந்தசாமிபாண்டியன், ஒன்றியக்கழக செயலாளா் துரைப்பாண்டியன் ஆகியோர் வெடிவிபத்தில் பலியானோர் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.