திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் 03-05-2024 காலை நடந்தது.
தெப்பம் குளத்தை 3 முறை சுற்றி வரும்.7-30 ஆரம்பமாகும் தெப்பதிருவிழா காலை 5 மணி வரை நடைபெறும்இந்த ஆண்டிற்கான தெப்பதிருவிழா வருகிற மே மாதம் 22-ந்தேதி, 23-ந் தேதி, 24-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. . இந்த தெப்ப திருவிழாவிற்கு திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள்
இந்த தெப்பத்தின் நீளம் 50அடி, அகலம் 50 அடி ஆகும். உயரம் 30 அடி. 520 காலி பேரல்களால் கட்டப்படும் தெப்பத்தில் 500 பக்தர்கள் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்படும்
திருவாரூரில் இருந்து டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்திகளுக்காக. V செந்தில் குமார்