புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில். அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் வழங்கப்படும், முதியோர். விதவைகள், உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, 450 பயனாளிகளுக்கும். ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியின நலத்துறை மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ. 13 ஆயிரம் வீதம். 30 பயனாளி களுக்கும். ரூ. 18ஆயிரம் விதம் 24 பயனாளிகளுக்கும். மொத்தம் ரூபாய். 8 லட்சத்தி 22,ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து சமூகநலத்துறை மூலம். மாற்றுத்திறனாளிகள். 35 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக. அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார். லட்சுமி நாராயணன். அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம். சட்டமன்ற உறுப்பினர்கள். பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி. கே எஸ் பி ரமேஷ் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா. மற்றும். அப்பகுதி என்ஆர்காங்கிரஸ் பிரமுகர்கள்.உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.