நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு மறைவிற்கு இரங்கல்-மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை. மனிதநேய_ மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். 6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர்.சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டதோழர் எம்.செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று திறம்படச்…