எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே பெருந்தோட்டத்தில் புதிய பயணிகள் நிழற்குடை எம்பி சுதா திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைத்து தர வேண்டுமென மயிலாடுதுறை எம்பி வழக்கறிஞர் சுதாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனை தொடர்ந்து எம்பி சுதா புதிய நிழற்குடை அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ₹6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்

இந்த தொகையைக் கொண்டு புதிய பயணிகள் நிழல் குடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை எம்பி வழக்கறிஞர் சுதா புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து சிறப்புறை ஆற்றினார் விழாவில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன்,காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பானுசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *