கொரடாச்சேரி.,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா , தமிழ் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பூந்தமிழ்பாவை தலைமை வகித்தார்.

இந்நிக்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பங்கேற்றார். பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

இதன் தொடர்ச்சியாக பள்ளியில் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள், புத்தகத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகள் , கடந்த ஆண்டு பள்ளியில் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் சாதனை படைத்த மாணவிகள், மற்றும் ஆறு முதல் 12 வகுப்பு வரை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவிகள்,

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றவர்கள் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் வழங்கினார்.

இந்த விழாவில் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் கலியபெருமாள், கல்வி புரவலர் பூண்டி கலைவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *