ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் கவர்னர் மாளிகையில் அவர் நேற்று ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பான்சும் இன்று அகமதாபாத்தில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை நேரில் காண உள்ளனர்.

இதற்காக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்தார். இந்நிலையில், இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் 4-வது மற்றும் கடைசி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை நேரில் காண அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தந்தனர்.

இருவருக்கும் மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இந்த போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமரின் வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *