நன்னிலம்., ஏப்ரல்.06
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதன் தொடர்ச்சியாக இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நான்காவது முறையாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவி வசம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.