சனிக்கிழமை முதல் குடிநீர் சீரான விநியோகம் மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வரும் வல்லநாடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மின்வெட்டுஏற்பட்டு வருகிறது. இதனால் வல்லநாட்டில் இருந்து வரும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி குடிநீர் சரிவர ஏற்ற முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது அதனால் மாநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டு வருகிறது. வருகிற சனிக்கிழமை முதல் மாநகர் பகுதி முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.