கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி போச்சம்பள்ளி வட்டம் மடத்தானூர் கிராமத்தில் காமராஜர் பிரதர்ஸ் நடத்தும் ஆண்-பெண் (இருபாலர்) 45 -ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லகுமார் எம்பி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், காசிலிங்கம் ஜேசுதுறை, காமராஜ்ர் பிரதர்ஸ் கபடி குழு மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் மடத்தனூர் ஆறுமுகம், ராஜீவ் காந்தி, அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் மடத்தானூர் மாரியப்பன் போச்சம்பள்ளி வட்டாரத் தலைவர் மிண்டிகிரி ரவி, மாவட்ட துணைத் தலைவர் சாந்த சீலன் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஆர்.டி.ஐ. மாவட்ட தலைவர் சத்தியசீலன், இளைஞர் காங்கிரஸ் ஒன்றிய அமைப்பாளர் துர்கேஷ், சக்தி, அர்ஜுனன்
உள்பட கபடி குழு நிர்வாகிகள் உடன் இருந்தன. மேலும் கர்நாடகா கேரளா டெல்லி ஆந்திரா பாண்டிச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து கபடி குழு உறுப்பினர்களும் கபடி போட்டியில் கலந்து கொண்டு கபடி ஆடினர்.