தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (,பொ) ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார் ஒருங்கிணைப்பாளர் ஹெப்சிபா ஜோஸ்லின் வரவேற்றார் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இம்மானுவேல் ஆசியுரை வழங்கினார் முதலாவது ஆண்டு மாணவ ஆசிரியர்களை இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் இனிப்பு, பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கரவோசை எழுப்பி வரவேற்றனர்
ஒய்எப்சி நிர்வாகி பிச்சையா சிறப்புரையாற்றினார்
உதவி பேராசிரியர்கள் சுவீட்லின் மேரி புஷ்பா, மரியசாந்தி, ஜெபா எபனேசர், நூலகர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா நன்றி கூறினார்