புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் ஐந்து அரசு பள்ளிகளில் நடந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடைகள், அதை தைப்பதற்கு ரொக்கபணம்,மற்றும் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் மடுகரை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் தலைமை வகித்து மாணவர்களுக்கு சைக்கிள் உட்பட சீருடைகள், மற்றும் ரொக்கபணம் வழங்கினார். மடுகரை ராமமூர்த்தி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்தவிழாவில் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணைசபாநாயகருமான ராஜவேலு தலைமைதாங்கி, சிறப்புறையாற்றி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை, ரொக்கபணம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மடுகரை தாளாளர் தனபூபதி உட்பட திரளாக பலர் கலந்துகொண்டனர்.