செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்பெனாத்தூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி தமிழ்த்துறை விரிவுரையாளர் கி. வேல்முருகன் பங்கேற்று கற்பித்தல் செயல்பாடுகள் பற்றிய எளிய செயல்முறைகளை பற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.