புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தாமரைக் குளம் அருகே மரக்கன்று நடும் விழா சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார்
புதுச்சேரியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தாமரைக் குளம் அருகே மரக்கன்று நடும் விழா நடந்தது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி திரு காசிநாதன் உதவி பொறியாளர்கள் திரு ராமன் திரு ராஜ்குமார் இளநிலை பொறியாளர் திரு சிவஞானம் பணி ஆய்வாளர் நற்குணன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் தவளக்குப்பம் கூட்டுறவு வேளாண் கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் ஆறுமுகம் ஆனந்தன் விஜயலட்சுமி அய்யனார் தமிழ் கும்பா ராஜகுரு திருஞானம் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.