தென்னை விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக,பி ஏ பி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க கோரி கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், கடந்த அறுபது ஆண்டு காலமாக பிஏபி நீரை நம்பி பிரதான கால்வாயின் இருவரும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்கு கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வந்ததாகவும் இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் கொடுத்த வழக்கின்படி,, பி ஏ பி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனால் நீண்ட கால நிலை பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே பிரதான கால்வாயில் கரையோர விவசாயிகளும் விவசாயிகளே என்பதை கருத்தில் கொண்டு பிஏபி பாசன திட்டத்தை பலப்படுத்த நீர் ஆதாரத்தை பெருக்க பல்வேறு வழியில் உள்ளதை கண்டறிந்து அதை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்..இந்த சந்திப்பின் போது,,தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கார்த்தி,கிருஷ்ணசாமி,ராமசாமி,ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்..