செய்தியாளர் ராஜாராம்குமார்
பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயான கொள்ளை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.
மேலும், அம்மனுக்கு கொள்ளை விடும் நிகழ்வில் காய்கறிகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் பல்வேறு தானியப் பொருட்கள் பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன், அங்காள பரமேஸ்வரிக்கு வேண்டுதல் நிறைவேறும் வகையில் காசு ஏலம் விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் குமாஞ்சாதம் வழங்கப்பட்டது.