தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது வருகின்ற 15.9.2025 திங்கட்கிழமை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த ஓவ்வொரு வாா்டுகளிலும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 இடங்களில் மொத்தம் 60 வாா்டுகளில் 300 இடங்களில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மேயா் ஜெகன் பொியசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.